"ஒரு நைட்டுக்கு எவ்ளோ.." - மோசமாக கேள்வி எழுப்பிய ஆசாமிக்கு.. நீலிமா ராணியின் "நச்" பதில்..!

 
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர். 
 
“வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள்” ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் “நிறம் மாறாத பூக்கள்” சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். 
 
தமிழ் சினிமாவில் “தேவர்மகன்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் “விரும்புகிறேன், தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல” போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் க-வர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் ஒரு கேள்வி-பதில் நிகழச்சியில் பேசினார் நடிகை நீலிமா ராணி. அப்போது திடீரென்று ஒருவர் “ஒரு இரவுக்கு உங்களுடைய கட்டணம் எவ்வளவு..?” என்று கேட்டுவிட்டார். 
 
இதைப் பார்த்து நீலிமா ராணி அதிர்ச்சியடைந்தாலும், ஆத்திரப்படாமல் அதே சமயம் காத்திரமாக அந்தக் கேள்வியைக் கேட்டவருக்கு உரைப்பதுபோல பதிலளித்திருக்கிறார். 
 

நீலிமா ராணி அளித்த பதிலில், “நான் சில கண்ணியமான சகோதரர்களையே இங்கே எதிர்பார்க்கிறேன்..!! கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்..! மக்களை அவமரியாதையாக பேசுவது வக்கிரமான மனம். 
 
தயவு செய்து உடனடியாக ஒரு உளவியலாளரை சந்திக்கவும்.. அந்த உதவி உங்களுக்கு இப்போது தேவைப்படுகிறது..” என்று சொல்லியிருக்கிறார்.
Powered by Blogger.