காசுக்காக எதையும் செய்வியா..? - ராணா டக்குபதியை விளாசும் ரசிகர்கள்..!


நடிகர் ராணா டகுபதி பாகுபலி படத்தில் பள்ளால் தேவன் என வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். 

ஆனால், தற்போது தான் நடிக்கவுள்ள புதிய படத்திற்காக தன்னுடைய உடல் எடையை மொத்தமாக இழந்து ஒல்லியாக மாறிவிட்ட்டார். இந்த திடீர் மாற்றம் பற்றித்தான் அவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்கின்றனர். 


இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "Smart Water" என்ற ஒரு தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்தின் பிராண்டினை விளம்பரப்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்தார். 


அதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். தண்ணீரை என்ன செய்து ஸ்மார்ட் ஆக்கினீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர். 

குடிக்கும்tதண்ணீரில் என்ன ஸ்மார்ட் தண்ணீர், சாதாரண தண்ணீர். காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வியா? என ஒருவர் ஒப்பனாகவே கேட்டுள்ளார்.இதற்கு, ராணா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று பொறுத்திருந்து பாப்போம்.


Powered by Blogger.