"கொஞ்சம் விலகியிருந்தா அவ்ளோ தான்.." - கண்ணாடி முன்பு குத்து ரம்யா கொடுத்துள்ள போஸை பாருங்க..!

 
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா தமிழில் பொல்லாதவன், குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 
 
இதே தொகுதியில் 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவு தலைவியாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் ரம்யா மாயமானார். 
 
அவரும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலும் காதலிப்பதாகவும் துபாயில் நடக்க இருந்த இவர்கள் திருமணம் ரத்தாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. பின்னர் திருமணம் ரத்தானதாக முரண்பட்ட செய்திகள் வந்தன. 
 
இதற்கு ரம்யாவின் தாய் ரஞ்சிதா விளக்கம் அளித்துள்ளார்.அது குறித்துப் பேட்டி அளித்த அவர்,’தற்போது ரம்யா திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. திருமணம் குறித்து ரம்யா முடிவு செய்தால் அதுபற்றி வெளிப்படையாக கூறுவோம். 
 
அவருடைய திருமணத்தை மூடிமறைத்து ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ரம்யாவின் திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். ரம்யா அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தனது தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. 
 
 
மேலும் ரம்யாவுக்கு இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வரவும் மனமில்லை. இதுபோன்ற காரணங்களினால் இரண்டுபேரும் பரஸ்பரம் பேசி பிரிந்துவிட்டனர் என்பது மட்டுமே உண்மை. 
 
 
இருப்பினும் அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினரும், நாங்களும் தொடர்பில் தான் இருக்கிறோம்’என்கிறார் மம்மி ரஞ்சிதா. 
 
 
ஆனால் ரம்யாவோ சில வாரங்களாகவே முற்றிலும் தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருக்கிறார். இந்நிலையில், குத்து ரம்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. 


வயசானலும், இப்போவும் சின்ன பொண்ணு மாதிரி சிக்குன்னு தான் இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
Powered by Blogger.