டாக்டருடன் உல்லாசம் - வீடியோ எடுத்து மிரட்டிய வேலைக்காரி - சென்னையில் பயங்கரம்...!

பிரபல டாக்டர், வீட்டில் யாரும் இல்லாததால் ஆன் லைன் மூலம் வீட்டு வேலைக்கு இளம்பெண்ணை அமர்த்தியுள்ளார். அந்தப் பெண் மீது டாக்டர் கொடுத்த புகாரும் அந்த புகாரில் கூறியுள்ள தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் டாக்டர் ஒருவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். கோடை விடுமுறையொட்டி டாக்டரின் குடும்பத்தினர் வெளியூர் சென்றனர். இதனால், வீட்டு வேலைக்காக ஆன் லைனில் பெண் தேடியுள்ளார். அப்போது, தேவி என்ற பெயரில் ஒருவர் டாக்டரை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து டாக்டர் வீட்டில் தேவி வேலை பார்த்துள்ளார். அதன்பிறகு நடந்த சம்பவங்கள்தான் டாக்டருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கார பெண் மீது திருவான்மியூர் போலீசில் அந்த டாக்டர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வீடியோ எடுத்தும் மிரட்டும் பெண்
திருவான்மியூரைச் சேர்ந்த டாக்டரின் வீட்டில் வேலை பார்த்த தேவி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து டாக்டரும் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துள்ளார். சில நாட்களுக்குப் பின், டாக்டரிடம் மீண்டும், மீண்டும் பேசிய அந்தப் வேலைக்கார பெண், நான் உங்கள் வீட்டில் வேலை பார்த்த நாள்களில் நீங்களும் நானும் சேர்ந்து உல்லாசம் அனுபவித்த சமயத்தில் எடுத்த வீடியோ என்னிடம் உள்ளது. 

நான் கேட்க்கும் பணத்தை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் அந்த வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என சொல்லி மிரட்டியுள்ளார்.

இதனால் தனது குடும்பத்தினருக்கு அசிங்கம் வந்துவிடுமே என பயந்துபோன டாக்டர், அந்தப் பெண் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார். மீண்டும், மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் டாக்டர் புகார் கொடுத்தார். அதன்பேரில் தேவியைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அதன் பெண்ணிடமிருந்து வீடியோ ஒன்றை பறிமுதல் செய்து, டாக்டரிடமும் விசாரணை நடத்தியிருக்கின்றனர். 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தேவி, பணக்காரர்கள் வீட்டுக்கு வேலைக்குச் செல்லும் போது வீட்டில் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகி உல்லாசம் அனுபவித்து அதை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து பணத்தை மிரட்டி வாங்கியுள்ளார்.
டாக்டரின் அதிர்ச்சியான லீலைகள்
அந்த வீட்டில் உள்ளவர்களும், அசிங்கப்பட்டு புகார் கொடுப்பதில்லை. ஆனால், திருவான்மியூர் டாக்டர் கொடுத்த புகாரால் தேவி சிக்கிக் கொண்டார். அதே நேரத்தில் டாக்டர் மீது தேவியும் பகிரங்க புகார் கூறியுள்ளார். டாக்டர் பற்றி தேவி கொடுத்த புகார் பேரில், டாக்டரிடமும் விசாரணை நடந்து வருகிறதாம்.

தேவியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ, உயரதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த அந்த அதிகாரிகள் டாக்டரின் லீலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கில்மா வீடியோ பற்றி டாக்டரிடம் கேட்டதற்கு அவர் அமைதியாக இருந்துள்ளார். மேலும், ஆன் லைன் மூலம் வேலைக்குச் சேர்ந்த பெண்ணின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்ற தகவல்களை போலீஸார் சேகரித்துவைத்துள்ளனர். 

இனி, ஆன்லைன் மூலம் பெண்களையோ, ஆண்களையோ வீட்டுவேலைக்கு தேர்வு செய்யும் போது கொஞ்சம் சூதானமா இருங்கப்பா..!
Powered by Blogger.